பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையினால் தடையில்லா மின்சார விநியோகத்தில் சிக்கல்?

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலைய வளாகத்திலுள்ள இரட்டை சுழற்சி மின் உற்பத்தி நிலையம் உட்பட பல மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இலங்கை மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

டீசல் பற்றாக்குறையே இதற்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மத்துகம, கொலன்னாவ மற்றும் துல்ஹிரிய மின் உற்பத்தி நிலையங்களும் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இன்று கிடைக்காவிட்டால், தடையில்லா மின்சாரம் வழங்குவது சவாலாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *