
அம்பாறை, பெப்.18:
அம்பாறை – கல்முனை பாண்டிருப்பு கடற்கரைப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் புதிய பல்வேறு வகையான துப்பாக்கி ரவைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் வடிவம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கரையொதுங்கிய இந்த துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைப்பற்றப்பட்ட ரவைகளை கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான பணியினை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.