
கொழும்பு, பெப்.18
நாடு முழுவதுமுள்ள மஞ்சள் செய்கையாளர்களிடமிருந்து ரூ.165 மஞ்சள் கிழங்கு நிர்ணய விலையில் கொள்முதல் செய்யப்படுகின்றது.
ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் மற்றும் இலங்கை வாசனைத் திரவியங்கள் சந்தைப்படுத்தல் சபை என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்ட செய்கையாளர்களிடமிருந்து ஒரு லட்சம் கிலோகிராம் மஞ்சள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.