ஐ.நா. அழுத்தங்களை எதிர்கொள்ளத் தயார் என்கிறார் டலஸ் அழகப்பெரும!

ஜெனிவாவில் இந்த முறை இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் கொண்டுவரப்படமாட்டா. ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இந்த முறை இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். எந்தத் தரப்பும் எமக்குச் சவால்விட முடியாது.

இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-

ஜெனிவாவில் இந்தமுறை இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை மாத்திரமே முன்வைக்கப்படவுள்ளது. இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணைகளும் கொண்டுவரப்படமாட்டாது.

ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தற்போது அலட்டிக்கொள்ள நாம் விரும்பவில்லை.

ஏனெனில் அந்தத் தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கு அறிவித்துவிட்டார்.

ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஏதாவது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டால் அதை எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம். நாட்டின் இறையாண்மையை மீறி எந்தத் தரப்பும் எமக்குச் சவால்விட முடியாது; நாமும் அடிபணியத் தயாரில்லை- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *