ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை வழங்குமாறு கோரியே அவர் இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலை முன்னின்று நடத்திய சஹ்ரான் ஹாசிம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குளியாபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, தன்னைக் கைது செய்வதற்கான எந்தவொரு முயற்சியையும் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு ஷானி அபேசேகர தனது அடிப்படை உரிமை மனுவில் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *