மரமுந்திரிகை பழத்தில் வைன் மதுபானம்!

மரமுந்திரிகை பழங்களை பயன்படுத்தி வைன் மதுபானத்தை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாரங்கா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த தயாரிப்பு சம்பந்தமான இரசாயன பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மரமுந்திரிகை பழங்கள் அதிகளவில் ஏப்ரல் மாதத்திலேயே கிடைக்கும். அந்த காலத்தில் வைன் மதுபானத்தை தயாரித்து சந்தைப்படுத்த எண்ணியுள்ளதாக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மரமுந்திரிகை செய்கை கிழக்கு மாகாணம் உட்பட பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *