
கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட மறுத்ததையடுத்து பொலிஸார் வேலுமணி உள்பட அதிமுக எம்.எல்.ஏக்களை கைது செய்தனர். அப்போது 50 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நிகழ்விடத்தில் இருந்ததால் பொலிஸாருக்கம் – அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தரையில் படுத்து கொண்டு தர்க்கத்தில் ஈடுபட்ட அதிமுகவினரைபொலிஸார் கட்டாக தூக்கிச்சென்றனர்.