எதிர்கால கல்வி நடவடிக்கை தொடர்பில் டளஸ் அழகபெரும வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணம், பெப்.18

இணையத்தை அடிப்படையாகக் கொண்டே, எதிர்கால கல்வி காணப்படும் என ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இணையத்தள வசதிகளை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.  அந்த வகையில், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு  இணையத்தள வசதிகள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருட்களை  கையளித்துள்ளார்.

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட டளஸ் அழகபெரும பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுடன் கலந்து கொண்டு கூறியதாவது,

16 ஆசிரியர்கள் மற்றும் 68 மாணவர்களுடன் இந்த பாடசாலை இயங்கி வருகின்றது.  இலங்கையின் கல்வி சமத்துவமின்மையை இல்லாது செய்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இலங்கையிலுள்ள மொத்த ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களில் 25 சதவீதம் பயிற்சி பெறாத ஆசிரியர்கள்  என்பதுடன், அவர்களில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 53 சதவீதம் பயிற்சி பெறாத ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் உள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 22 தேசிய பாடசாலைகள் மாத்திரமே உள்ளமையை தான் கல்வி அமைச்சராக இருந்த போது அறிந்துக்கொண்டதாகவும், ஜனாதிபதியின் 1000 தேசிய பாடசாலைகள் திட்டத்தில் அந்த தொகையை 76 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *