
இலங்கைக்கு கடத்தவிருந்த 400 கிலோ கஞ்சா நாகபட்டினம் கடற்கரையில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகப் பொலிஸாருக்கு இலங்கையில் இருந்து கிடைத்த ரகசிய தகவல் ஒன்றின் பெயரில் இந்த கஞ்சாவை தமிழகப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாகபட்டினம் அக்கரைப்பேட்டை ஊடாக கடத்த முயன்ற கஞ்சா மீட்கப்பட்டதோடு கடத்தலில் ஈடுபட்ட மூவரையும் தமிழகப் பொலிஸார் கைது செய்தனர்.