இலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கம் – வடக்கு மாகாணம் உடைய அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது 07.10.2023 ஆம் திகதி யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் .செ.பிரணவநாதன் கலந்துகொண்டார்.
இந்நிலையில் தொழிற் சங்கத்திற்கான வாழ்த்துச் செய்தியை தெரிவித்ததோடு, வருமானப் பரிசோதகர்களது தொழிற் சங்க கோரிக்கைகளை நிறைவேற்ற தன்னாலான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்தார்.
மேலும் வடக்கு மாகாண வருமானப் பரிசோதகர்களது பேராதரவோடு தொழிற் சங்கம் உத்தியோகபூர்வமாக செயல் வலுப் பெற்றது. தொழிற் சங்கத்தின் முதலாவது நிர்வாக சபையின் தலைவராக .ச.போல் தர்சாந், செயலாளராக .கோ.ஜெகஜீவன், பொருளாளராக .ஜோ.ஆரினி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.