
இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள கடுமையான நெருக்கடி குறித்து இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை தெரிவித்துள்ளது.
உதிரி பாகங்களை முன்பதிவு செய்வது தொடர்பான கடன் பத்திர வசதிகளை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அந்த சங்கம், வங்கிகளின் இந்த உத்தியோகபூர்வமற்ற கட்டுப்பாடுகள் வாகன பராமரிப்பை முடக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
“இந்த கட்டுப்பாடுகள் பொருட்கள், மக்கள் போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த பொருளாதாரத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
போக்குவரத்துத் துறை நிறுத்தப்பட்டால், அது நாட்டின் முக்கிய வருவாய் மூலங்களான ஏற்றுமதி மற்றும் சுற்றுலாதுறை போன்றவற்றில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்”என்று அந்த சங்கம் எச்சரித்தது.
பல வாகன உரிமையாளர்கள் ஆபத்தான, போலி உதிரி பாகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு குப்பைக் கிடங்குகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உதிரிபாகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இது வாகனப் பாவனையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.