உள்ளாட்சி தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாநகராட்சி பகுதியில் 1,369 தொகுதிகள், நகராட்சி பகுதியில் 3,824 தொகுதிகள், பேரூராட்சி பகுதியில் 7,408 தொகுதிகள் என மொத்தம் 12,601 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுள்ளன.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எதிர்வரும் 22 ஆம் திகதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *