
இரத்தினபுரி, பெப்.19
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று (18) நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கடந்த ஒரு மாதத்தில், 15க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.