
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கில், அரச தரப்பின் பிரதான சாட்சியாளர்களில் ஒருவரான 2 ஆவது சாட்சியாளர், புத்தளம், அல் சுஹைரியா மதரஸா பாடசாலையின் முன்னாள் மாணவன் எனக் கூறப்படும் மொஹம்மட் பெளஸான், தான் நீதிமன்றில் வழங்கிய சாட்சியத்தில் குறிப்பிட்ட விடயங்கள், பொய்யானது எனவும் அது எதுவும் நேரடியாக தன் கண்களால் காணாதவற்றை அடிப்படையாக கொண்டது எனவும் ஒப்புக்கொண்டார்.