
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நேற்றிரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இந்தியாவைச் சேர்ந்த ஒரு படகையும் அதில் இருந்த 6 மீனவர்களையும் கைது செய்தனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.
தமிழர் உரிமை கண்காணிப்பகத்தின் இரண்டாவது மக்கள் அமர்வு மன்னாரில்!