நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான உணவும் தட்டுப்பாடு!

கடந்த ஒன்றரை மாதங்களாக நாட்டில் செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்கு காரணம் என அதன் செயலாளர் கலாநிதி நுவான் ஹேவாகமகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிற கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கால்நடைத் தீவன விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், முட்டை விலை குறைந்துள்ளதால், தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *