யாழ் சர்வதேச சதுரங்க போட்டிகள் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன.

“யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் சகல பாகங்களில் இருந்து மாத்திரம் அல்ல தமிழ்நாடு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் பங்கேற்கவுள்ளனர் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து ஏற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ”எமது பிரதேசத்தில் உள்ள சதுரங்க வீரர்கள் தங்களின் சர்வதேச தரத்தை கூட்டுவதற்கு இது, மிகவும் பயனுள்ளதாக அமையும். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எம்மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் சர்வதேச போட்டிக்கான எமது இத்தனை வருட கனவை நேர்த்தியான முறையில் பூர்த்தி செய்ய அனைத்து தரப்பின் ஆதரவையும் கோரி நிற்கிறோம்.

போட்டி தொடர்பிலான மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் +94757466484 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது Jdcanew@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் , https://www.facebook.com/profile.php?id=100079627133737&mibextid=LQQJ4d எனும் தமது முகநூல் பக்கத்தின் ஊடாக மேலும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *