கண்ணீரில் நனைந்தது முல்லைத்தீவு மண் – உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி! samugammedia

தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று தாயகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு – விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டுள்ள மக்கள் கண்ணீர் மல்க மலர் தூவி சுடரேற்றி உணர்வு பூர்வமாக உயிரிழந்த மாவீரர்களுக்கும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இம்முறை மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வில் வழமைக்கு மாறாக அதிக அளவிலான மக்கள் பங்கேற்று தமது அஞ்சலி செலுத்துவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *