கல்முனையில் வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலை!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, அக்கரைப்பற்று,  நிந்தவூர், நாவிதன்வெளி, சம்மாந்துறை, பிரதேச பகுதிகளில் தற்போது பெய்து வரும் அடை  மழை  காரணமாக வெள்ளம் தேங்கியுள்ளதுடன் அங்கு வாழும் மக்கள் பெரும்  சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட  அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக சில முகத்துவாரங்கள்  வெட்டப்பட்ட போதிலும் வெள்ள நீர் தேங்கிக்  காணப்படுகின்ற நிலைமையே காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *