போர் விமானம் மீது லேசர் தாக்குதல் : சீனா மீது அவுஸ்ரேலியா குற்றச்சாட்டு

சீனக் கடற்படைக் கப்பல் ஒன்று தனது போர் விமானம் ஒன்றின் மீது “மிலிட்டரி கிரேட்” லேசரை பிரகாசித்ததாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்தபோது, சீனக் கப்பல் வடக்கு அவுஸ்ரேலிய அரபுரா கடலில் சென்று கொண்டிருந்தது என்றும் அறிவித்துள்ளது.

இதுபோன்ற செயல்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தொழில்சார் மற்றும் பாதுகாப்பற்ற இராணுவ நடத்தையை தாம் கடுமையாக கண்டிப்பதாகவும் அவுஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் குறித்த நடவடிக்கை தொடர்பாக சீன அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *