போதைப்பொருள் கடத்தல் முகவரின் ஊரை கைப்பற்றியது மெக்சிகோ இராணுவம்!

மேற்கு மெக்சிகோ – மைக்கோகான் மாகாணத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் முகவர் ஒருவருக்கு சொந்தமான ஊரை மெக்சிகோ இராணுவம் கைப்பற்றியுள்ளது.

சமீப வாரங்களில் சுற்று வட்டாரத்தில் போதைப்பொருள் கும்பல்களால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் சிக்கி ஒருவர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து இராணுவ வாகனங்கள் மற்றும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் குறித்த ஊரில் ரோந்து பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் பலவருடங்களாக தலைமறைவாக இருந்த போதைப்பொருள் விற்பனை முகவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் நிலவும் வன்முறை மற்றும் ஸ்திரமற்ற தன்மை காரணமாக, நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *