வன்முறை கும்பல் வீடு புகுந்து வாள்வெட்டு

யாழ்ப்பாணம். பெப்.20

யாழ்.புத்துார் சிறுப்பிட்டி – கலையொளி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோல் குண்டும் வீசியுள்ளது.

வாகனம் ஒன்றில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்றே தாக்குதல் நடத்தியுள்ளதுடன்,
வீட்டின் மீது பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பி ஓடியுள்ளது.

பின்னர் வீதி ஓரத்தில் வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்திற்கு தனிப்பட்ட பகையே காரணமாக இருக்கலாம் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *