உலகில் வேறு எங்கும் நடைமுறைப்படுத்தப்படாத கருப்பொருளின் அடிப்படையில் நாட்டில் பொதுச் சட்டத்தை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சியை பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு பாராட்டியுள்ளது.
பல்கலைக்கழக சமூகத்தின் கருத்துக்களையும் திரட்டுவதற்காக நேற்று கொழும்பு டீஆஐஊர் இல் இடம்பெற்ற ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பல்கலைக்கழக பேராசிரியர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
கொழும்பு, ருகுணு, ஜயவர்தனபுர, யாழ்ப்பாணம், தென்கிழக்கு, பேராதனை, களனி, ரஜரட்டை, வயம்ப உள்ளிட்ட 18 பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழக வேந்தர்கள், வைத்தியர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட குழுவினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.