சரணடைந்த பின்பே பிரபாகரன் இறந்தாராம்: டக்ளஸ் தேவானந்தா

பிரபாகரன் மற்றவர்களுக்கு சயனைட் கொடுத்த பின்னர் தான் சரணடைந்தே இறந்தான் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

மானிப்பாயில் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா கூறியதாவது,

பிரபாகரன் இறந்ததற்காக நான் வேதனையடைகிறேன். ஏனென்றால் அவன் மற்றவர்களுக்கு சயனட்டை கொடுத்து சாகடித்துவிட்டு, தான் சரணடைந்து இறந்துவிட்டான்.

பிரபாகரன் எத்தனையோ தடவை என்னை கொல்வதற்கு முயற்சித்தான். அவனால் அது முடியாது போனது. நான் அப்பவே வெளிப்படையாக சொன்னான் எங்களுடைய மக்களது பிரச்சினைகளை தீர்க்க முன்னர் என்னை யாராலும் கொல்ல முடியாது என்று.

நான் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்குடனேயே செயல்பட்டு வருகிறேன்
தவிர பொய்யான வாக்குறுதிகளை என்னால் வழங்க முடியாது.ஆகவே நான் பிரபாகரனை பழிவாங்க முயற்சிக்கவில்லை.

எனது ஒரு கண்ணை பிரபாகரன் எடுத்துவிட்டான்.இன்று இந்த மக்களை மிகவும் மோசமான நிலைக்குள் தள்ளியவன் பிரபாகரன். என்னுடைய நெருக்கமான உறவுகளை காணாமல் ஆக்கியவன். ஆகையால் என்னால் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *