யாழில் 5 மாத குழந்தையுடன் தலைமறைவான கணவன்: தீவிர தேடுதலில் மனைவி

யாழ்ப்பாணம் மாவட்டம் இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே கணவன் – மனைவி இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கணவன் 5 மாதப் பிள்ளையை துாக்கி சென்ற சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில், பொலிஸார் மல்லாகம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து கணவனை குழந்தையோடு நீதிமன்றில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டது.

இருப்பினும், பிள்ளையின்றி நீதிமன்றில் முன்னிலையான நிலையில், 5 மாத பாலூட்டும் குழந்தை என்பதற்கிணங்க தாயாரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் பணித்தது.

இந்த நிலையில் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காது கணவர் குழந்தையோடு நேற்றைய தினம் தலைமறைவாகியுள்ளார்.

இதையடுத்து, மனைவி இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதோடு தாயார் குழந்தையை பல இடங்களிலும் தேடி அலைகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *