நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் நாளை (திங்கட்கிழமை) மின்வெட்டினை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்  ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ள

போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கமையவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன், தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *