49ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கும் பீரிஸ் தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குவார் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின்போது ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பான எழுத்துமூலமான அறிக்கையை சபையில் முன்வைப்பார்.

அதனைத்தொடர்ந்து, மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பான உரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சபையின் 49ஆவது அமர்வின் உயர்மட்டப் பிரிவில் உரையாற்றவுள்ளார். அதன் பின்னர் இலங்கை தொடர்பான உரையாடலிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் முக்கியஸ்தர்களுடன் சந்திப்புக்களையும் நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *