கிழக்காசியாவின் மாபெரும் நுழைவு வாயிலாக அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம் – மோடி

கிழக்காசியாவின் மாபெரும் நுழைவு வாயிலாக அருணாச்சலப் பிரதேசத்தை உருவாக்குவோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாநிலத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை மக்கள் பாதுகாக்கும் விதமும், அதனை முன்னெடுத்து செல்லும் விதமும் நாட்டிற்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்களை தேசம் நினைவு கொள்கிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைகளை பாதுகாக்க நடந்த போரில்  அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரம், ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பற்ற பாரம்பரியமாகும்.

இந்த நூற்றாண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு, கிழக்கு இந்தியா குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்காற்றும் என நம்புகிறேன். உள்கட்டமைப்பு வசதிகள் கிழக்கு ஆசியாவின் பெரிய நுழைவு வாயிலாக அருணாச்சலை உருவாக்க உழைத்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *