
கொழும்பு, பெப்.21
கலப்பு தேர்தல் முறைக்கான புதிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளூராட்சி தேர்தல் நடைபெறும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மக்கள் ஐக்கிய முன்னணியின் இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது தினேஷ் குணவர்தன கூறியதாவது,
தனது தலைமையிலான தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் சீர்திருத்தங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பதும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்க முடியும் என தெரிவித்தார்.