
6 மாதங்கள் தலைமறைவாகயிருந்த வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டு வந்த இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்குவிலைச் சேர்ந்த 22 வயதுடையவரே திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார். கோப்பாய், யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற 6 வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேக நபர் 6 மாதங்களாகத் தேடப்பட்டு வந்தார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.