போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பொலிஸார் தாக்குதல்- விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம்

அரியானா மாநிலம்- கர்ணாலில் சுங்கச்சாவடிக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து, விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கர்ணாலில் சுங்கச்சாவடிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒருவரை, பொலிஸார் இழுத்துச் சென்று, அவரை தடிகளால் தாக்கும் காட்சி  சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

அதனைத் தொடர்ந்தே விவசாயி மீதான தாக்குதலைக் கண்டித்து, அரியானாவின் பல பகுதிகளிலும் விவசாய சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் பல்வேறு சுங்கச்சாவடிகளை போராட்டக்காரர்கள் முற்றுகையிடப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்திக் கடந்த வருடம் நவம்பர் இறுதியில் இருந்து விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *