ஆந்திர மாநில அமைச்சர் கவுதம் ரெட்டி மாரடைப்பால் மரணம்

ஆந்திரா, பெப்.21

ஆந்திர மாநில தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மேகபதி கவுதம் ரெட்டி (49) காலமாகியுள்ளார்.

மாரடைப்பு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இன்று அவருக்கு திடீரென மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மறைந்த மந்திரி கவுதம் ரெட்டி, ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் ஆத்மகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினரானவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *