
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் பருத்தித்துறை சுப்பர்மடம் மீனவர்களால் மடக்கி பிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, எல்லைதாண்டிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் சுப்பர்மடம் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த மீனவர்கள் நீரியல் வளத்திணைக்களத்தினால் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இன்றையதினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன்படி 21 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மீனவர்களிடம் கைப்பற்றப்பட்ட இரண்டு படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.