
பருத்தித்துறை, பெப்.21
இந்தியாவிலிருந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 21 விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை – சுப்பர்மடம் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட 21 இந்திய மீனவர்களும் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் நீரியல் வளத்திணைக்களத்தினால் பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
திங்கட்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன்படி 21 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறும் மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளை அரசுடமையாக்குமாறும் பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.