தீவகப் பெண்களின் நிலை வருத்தமளிக்கிறது, உதவுவதற்கு நான் தயார்! ஆளுநர் ஜீவன்

யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில் அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது.

இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில் இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன்.

யாழ். மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில் அதிலும் பெண்களின் நிலை தொடர்பில் இவ்வாறான தகவல்கள் வெளிவருவது வருத்தமளிக்கிறது.

ஆகவே சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்களுக்கு ஏற்ற தொழில் துறையை ஏற்படுத்துவதற்கு வடக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பை நிறைவேற்ற தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *