10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 21 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே அவர்களுக்கு  தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை மீனவர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

இதனை அடுத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய நிலையில் இன்றுவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *