முஸ்லிம் ஆண்களின் பலதார திருமணங்களுக்கு அனுமதி!

கடுமையான நிபந்தனைகளின் கீழ் முஸ்லிம் ஆண்களின் பலதார திருமணத்திற்கு அனுமதி வழங்கும் கொள்கை ரீதியான முடிவு உட்ட முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களை உள்ளடக்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசமைப்புச் சட்டவாக்கம் தொடர்பான அமைச்சரவை உப குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், நீதியமைச்சு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அமைய முஸ்லிம் ஆண்களின் பலதார திருமணத்தை தடை செய்வது, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது மற்றும் காதி நீதிமன்றங்களை ஒழிப்பது ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

எனினும் இந்த முடிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் பலதார திருமணச் சட்டத்தை மாவட்ட நீதிமன்றங்கள் கையாள்வது சட்ட தாமதத்திற்கு மற்றுமொரு காரணம் என்பதால், காதி நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்பது நீதியமைச்சின் நிலைப்பாடாகும்.

எனினும் காதி நீதிமன்றங்களில் தீர்க்க முடியாது பிரச்சினைகளை மாத்திரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது என நீதியமைச்சு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *