11 வது விமானப்படை தளபதி கோல்ப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு !

இலங்கை விமானப்படை மற்றும் ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் இணைந்து நடத்திய 11 வது விமானப்படை தளபதி கோல்ப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

டயலொக் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் 20ம் திகதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவின் பங்கேற்பில் சீனக்குடா ஈகிள்ஸ் கோல்ஃப் லிங்க்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

ஆண், பெண் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர வீராங்கனைகள் 100ம் மேற்பட்டவர்கள் இந்த தொடரில் பங்குபற்றினர்.

2024ம் ஆண்டுக்கான ஆடவர் பிரிவின் விமானப்படை தளபதி கிண்ணத்தை எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க பெற்றுக்கொண்டார்.

மேலும் மகளிர் பிரிவில் அனூஷா சேனாதீர பெற்றுக்கொண்ட அதேவேளை முப்படை சேவையாளர்களுக்கான சவால் கிண்ணத்தை விமானப்படையின் விங் கமாண்டர் அசந்த குணரத்ன பெற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *