எரிபொருள் தாங்கிய ஐந்து கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளது!

எரிபொருள் தாங்கிய 5 கப்பல்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தலா ஒவ்வொரு கப்பலிலும் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெற்றிக் டன் எரிபொருள் உள்ளதாக அந்தக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுஜித் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கு பயன்படுத்தும் எரிபொருள் நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.

இதன்மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்காலத்தில் நீக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *