நாட்டில் 16 ஆயிரத்தை கடந்தது கொரோனா பலியெடுப்பு

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மேலும் 30 பேர் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (20) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 16, 024 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை இன்றைய தினம் 16,000 ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *