நாட்டில் எரிபொருள், மின்விநியோக நெருக்கடி: இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விசேட கூட்டம் பற்றி தீர்மானிக்க்ப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவி வரும் எரிசக்தி பிரச்சினை குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.

இந்தக் கூட்டம் தொடர்பில் அமைச்சரவை அமைசர்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் மற்றும் மின்விநியோகம் என்பனவற்றில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *