கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கை

கொழும்பு, பெப்.22

கொரோனா வைரஸ் தொற்று பரவலினால் மூடப்பட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஹோமாகம – பிட்டிபனயில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்ப பீடம் மீள திறக்கப்படாமையினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்நிலை ஊடாக விரிவுரைகள் நடத்தப்பட்ட போதிலும் அனைத்து பிரயோக பரீட்சைகள் மற்றும் ஏனைய பரீட்சைகள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை என நான்காம் கல்வி ஆண்டு மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்ய அதிக காலம் செலவிட வேண்டியேற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீட பேராசிரியர் சுமேத ஜயநெத்தியிடம் கூறியதாவது, மாணவர்களின் சிரேஷ்டத்துவம் அடிப்படையில் பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, விரைவில் பொது மற்றும் பிரயோக பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா கட்டுப்பாட்டு சுகாதார விதிமுறைகளுக்கமைவாக, விடுதிகளில் 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டமை தற்போதைய சிக்கலுக்கான காரணம்.

இது தொடர்பிலும் உடனடி நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *