
ஹட்டன், பெப்.22
வட்டவளை – ரொசெல்ல பகுதியில் உள்ள விகாரையில் வைத்து 13 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விகாரையின் பிரதமகுருவால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை வட்டவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து பிக்குவை கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.