இலங்கை மத்திய வங்கிக்கு ஜனாதிபதியின் அவசர அறிவிப்பு

மின்சார உற்பத்திக்கும் மற்றும் நாட்டிற்கும் தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு போதுமான நிதியை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமை தொடர்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மனங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *