வவுனியா மாவட்டம் தொடர்பில் சுாகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள கவலை

கோவிட் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்காக தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டம் துரித கெதியில் இடம்பெற்று வருகின்ற போதிலும் வவுனியா மாவட்டத்தில் சுகாதார தரப்பினால் மூன்றாவது தடுப்பூசி வழங்கும் பணி தாமதமடைவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளரால் வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு கண்டிப்புடனான கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

19.02.2022 ஆம் திகதி வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில்,

20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மூன்றாம் கட்ட தடுப்பூசி சனத்தொகை அடிப்படையில் 29.6 வீதமாகவே காணப்படும் நிலையில் இவ் அளவு மட்டம் 70 வீதமாக காணப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான அடைவு மட்டமானது எதிர்மறையான விளைவுகளை மாவட்டத்திற்கு மட்டுமன்றி நாட்டிற்கே ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை தடுப்பூசி குறைந்த அளவில் வழங்கப்பட்டமைக்கு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரே காரணம் என குறிப்பட்டுள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி பெற்றவர்களின் அடைவு மட்டம் அதிகரிக்காதுவிடின் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராகியோர் கணக்காய்வாளர் விசாரணைக்கு பதிலளிக்க வேண்டியேற்படும் எனவும் தடுப்பூசி வழங்கலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தனிப்பட்ட அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதிக்கு முன்பதாக வவுனியா மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 45 வீதமாக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் தொடர்ச்சியாக வாராந்தம் 10 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *