இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி – 23 பேர் படுகாயம்

கஹதுட்டுவ-கொரலைமா பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்தில் பெண்கள் 20 பேர் உட்பட 23 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *