ஊழியர் சேமலாப நிதியில் 30 வீதத்தைப் பெறலாம்

ஊழியர் சேமலாப நிதியின் புதிய சட்டத் திருத்தத்துக்கமைய எதிர்காலத்தில் 30% நிதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை சபையின் மாதாந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை, ஊழியர் சேமலாப நிதியின் 30% பயனாளிகளின் நிதி வீட்டுக் கட்டுமான பணிகள் அல்லது மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற செலவுகளை குறைக்கும் நோக்கத்தில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே, எதிர்காலத்தில் உறுப்பினர்கள் தமது தேவைகளுக்காக 30% நிதியை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனினும், தொடர்ந்து பத்து வருடங்களாக ஊழியர் சேமலாப நிதி திணைக்களத்துக்கு 300,000 ரூபாய்க்கு மேல் பங்களிப்பு செய்த உறுப்பினர்கள், இந்த 30% முன் நிதியை பெற்றுக்கொள்ளும் தகுதியுடையவர்கள் என அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *