இந்திய அணிக்கெதிரான இருபதுக்கு இருபது தொடரிலிருந்து வனிந்து விலகல்!

இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் விளையாடும் வாய்ப்பினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க இழந்துள்ளார்.

அவுஸ்ரேலிய சுற்றுப் பயணத்தின் போது கொரோனா தொற்றுக்குள்ளான ஹசரங்க, இன்னும் அதிலிருந்து குணமடையாத காரணத்தினால் அவர் இந்தியாவுடானா மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.

கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் முன்னதாக ஹசரங்க அவுஸ்ரேலியாவுடனான இறுதி மூன்று போட்டிகளிலும் விளையாடவில்லை.

அவரது 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்த போதிலும், அண்மையில் அவருக்கு மீண்டும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் மீண்டும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அவர் அவுஸ்ரேலியாவை விட்டு வெளியே முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *