மின்வெட்டு அமுல் : பொதுமக்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்கின்றார் ரணில் !

அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட முடியும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், பொதுமக்களால் இது தொடர்பாக அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போது அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது என கூறினார்.

ஆகவே பரீட்சை முடியும் வரை மார்ச் 5 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *