4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. சாகும் வரை சிறை தண்டனை

4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சாகும் வரை சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 4 வயது சிறுமி ஒருவருக்கு காஜா முகமது என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தற்போது 11 ஆண்டுகள் கழித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காஜா முகமது என்ற நம்பருக்கு இயற்கையாக மரணம் அடையும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், காஜா முகம்மதுக்கு ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Get the latest Tamil news here. You can also read all the news by following us on Twitter, Facebook and Telegram.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *